Paristamil Navigation Paristamil advert login

▶ நாடு முழுவதும் மகரந்த ஒவ்வாமை எச்சரிக்கை! - அவதானம்!

▶ நாடு முழுவதும் மகரந்த ஒவ்வாமை எச்சரிக்கை! - அவதானம்!

12 சித்திரை 2024 வெள்ளி 11:28 | பார்வைகள் : 2913


கிட்டத்தட்ட நாட்டின் அனைத்து பாகங்களுக்கும் மகரந்த ஒவ்வாமை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுவாசம் தொடர்பான பிரச்சனைகள், தும்மல், இருமல், சளி போன்ற ஒவ்வாமை நோய்கள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

காற்றில் பரவும் நுண்ணுயிர்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் தேசிய நிறுவனமான Réseau nationale de surveillance aérobiologique இந்த எச்சரிக்கையை இன்று ஏப்ரல் 12, வெள்ளிக்கிழமை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை காரணமாக தலைநகர் பரிஸ் மற்றும் இல் து பிரான்சின் அனைத்து பகுதிகள் உட்பட நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களுக்கு (புகைப்படத்தில் காண்க) சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்