Paristamil Navigation Paristamil advert login

சிசு பேசுகின்றேன்....

சிசு பேசுகின்றேன்....

15 மார்கழி 2011 வியாழன் 14:30 | பார்வைகள் : 9366


தாயே!!!


சிசுவான என்னை


சிறை பிடிக்கின்றது


ஆயிரம் எண்ணங்கள்


எதிர்காலத்தை எண்ணி...



அன்னையே!


என்முகம் அறிந்திருக்க


உனக்கு வாய்ப்பில்லை


உன் ஒவ்வொரு அசைவிலும்


உன்னை வடிவமைகிறேன்.


உன் உணர்வுகளின் துடிப்பில்


உன்னை புரிகிறேன்


உன் மூச்சின் ஒலியின்


வெளியுலகின் நிலையை உணர்கிறேன்



சொர்க்கமான


உன் குட்டி வயிற்றில்


செழுமையாய் வாழுகிறேன்


உன் வாய் மூணு மூணுக்கும்


இசை கேட்டே


நிம்மதியாய் உறங்குகின்றேன்.


உன் கண்களில்


கண்ணீர் குளமாகும் போது


நானும் அழுகிறேன்.


உன்னில் சிரிப்பனை காண


எட்டி உதைகிறேன்


உன் முகம் மலர்கிறது


இவற்றை நானும் ரசிக்கின்றேன்


உன் அசைவுகளின் மூலம்..



இருந்தும்


நாளைய தினம்


நான் வெளி உலகம்


காண வேண்டிய நிர்ப்பந்தம்


ஆகையால்,


அச்சம் என்னை அரவணைக்கின்றது


நாளைய என்


எதிர்காலத்தை எண்ணி..

வர்த்தக‌ விளம்பரங்கள்