Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவாளர்களான மாணவர்கள் அதிரடியாக கைது 

அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவாளர்களான மாணவர்கள் அதிரடியாக கைது 

2 வைகாசி 2024 வியாழன் 09:39 | பார்வைகள் : 1072


இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டிடத்தை கைப்பற்றி போராட்டம் நடத்திய மாணவர்களை நியூயார்க் போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் போரை நிறுத்தக் கோரி அமெரிக்கா முழுவதும் பல்வேறு முக்கிய பல்கலைக்கழகங்களில் கடந்த சில நாட்களாகவே போராட்டம் பரவி வருகிறது.

இன்று (01.05.2024) நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகம். சில பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


ஹாமில்டன் மண்டபத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த நியூயார்க் போலீசார், சில மாணவர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட பாலஸ்தீன ஆதரவாளர்களை கைது செய்தனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்