Paristamil Navigation Paristamil advert login

அப்பாவி கணவனும் அடிப்பாவி மனைவியும்

அப்பாவி கணவனும் அடிப்பாவி மனைவியும்

21 பங்குனி 2024 வியாழன் 13:18 | பார்வைகள் : 823


மனைவி: ஏங்க.. அந்த லேடி அழகா இருந்தாங்களா? 

கணவன் (மைண்ட் வாய்ஸ்): ஆமான்னு சொன்னாலும் அடி விழும்.. இல்லன்னு சொன்னாலும் மரண அடி விழுமே. 

மனைவி: என்ன யோசிக்கிறீங்க?

கணவன்: அன்னைக்கு ஒரு புடவை வாங்க கேட்டியே.. அதே மாதிரி ஒரு டிசைன வர வழியில பார்த்தேன். யாராவது வாங்கிட போறாங்க. இப்பவே போலாமா..

மனைவி: அப்படியா சரி வாங்க போகலாம். 

கணவன் (மைண்ட் வாய்ஸ்): அப்பாடா! அடி வாங்குறதுக்கு, ஆயிரம் ரூபாய் புடவை வாங்கி கொடுத்துரலாம்.

மனைவி: சரி நான் காரை ஸ்டார்ட் பன்றேன். நீங்க வாங்க! கணவன்: ஓகே போ.. நான் பர்சை எடுத்துட்டு வந்துறேன். 

மனைவி: (காரில் ஏறியவுடன்) ஏங்க, இறந்ததுக்கு அப்றம் ஆம்பளைங்க எல்லாம் எங்க போவாங்க? 

கணவன்: இதுல என்ன டவுட் இருக்கு.. சொர்க்கத்துக்கு தான் 

மனைவி: அப்ப நாங்க எல்லாம் எங்க போறது? 

கணவன்: எல்லா பக்கமும் லாக் செஞ்சா எப்படிம்மா? டிராவல் பண்ணும்போது கேக்குற கேள்வியா இது.. ரோட்ட ஒழுங்கா பார்த்து வண்டி ஓட்டு 

மனைவி: எந்த கேள்விய எப்ப கேட்டா என்ன? நேரம் காலமெல்லாம் இல்ல.. நீங்க இல்லாம சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப்பட்டேன். சமைச்சு தரக்கூட ஆளே இல்ல.

கணவன்: அப்படி என்ன செஞ்ச? 

மனைவி: காலையில பால் காய்ச்ச சட்டிய ஸ்டவ்ல வெச்சு ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. பால் பொங்கவே இல்ல 

கணவன்: அப்டியா? என்னாச்சு 

மனைவி: ஏங்க அது பால் இல்ல.. வெள்ளையா இருக்கேன்னு இட்லி மாவ வெச்சுட்டேன்! 

கணவன்: அப்றம் என்ன செஞ்ச? மனைவி: நீங்க வீட்டுக்கு வந்தவுடனே ஒன்னு சாப்பிட கொடுத்தேனே? 

கணவன்: ஆமா.. அத ஏன் இப்ப சொல்லி காட்டுற 

மனைவி: தீஞ்சு போன இட்லி மாவை எங்க போய் கொட்டுறதுன்னு யோசிச்சேன். உங்க வயிறுதான் சரியான இடம்னு தோணுச்சு! அதான் டொமேட்டோ சாஸ் ஊத்தி சாப்பிட கொடுத்துட்டேன். 

கணவன்: உனக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போட்ட என்னை கொலை பண்ண பார்த்து இருக்க.. சரி விடு!

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்