Paristamil Navigation Paristamil advert login

பச்சையான சிக்கனை, ரொட்டியுடன் சேர்த்து 16 நாட்களாக சாப்பிடும் நபர்!

பச்சையான சிக்கனை, ரொட்டியுடன் சேர்த்து 16 நாட்களாக சாப்பிடும் நபர்!

6 மாசி 2024 செவ்வாய் 08:01 | பார்வைகள் : 660


விஞ்ஞான ரீதியில் பரிசோதனை என்ற பெயரில் நபரொருவர் வித்தியாச முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

ஜான் என்ற பெயர் கொண்ட அந்த நபர், சமைக்கப்படாத பச்சையான சிக்கனை, ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடுகிறார். கூடவே சமைக்காத பச்சை முட்டைகளையும் சாப்பிடுகிறார்.

அவருடைய பரிசோதனை பற்றி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட செய்தியில்,

ஏதேனும் சில விசயங்களை செய்ய கூடாது என யாரேனும் என்னிடம் கூறினால், அதனை செய்து பார்க்க வேண்டும் என அது எனக்கு சிறியதோர் ஆர்வம் ஏற்படுத்தி விடும். இந்த முறை அது சிக்கனாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதற்காக ஒன்றல்ல இரண்டல்ல... 16 நாளாக பச்சையாக சிக்கன் சாப்பிட்டு வருகிறார். இதன்படி, வயிறு பெருத்து வலிக்கும் வரை தொடர்ந்து இந்த சவாலை செய்ய வேண்டும் என அவர் தீர்மானித்துள்ளார். 

எனினும், இதனை உங்கள் வீட்டில் செய்ய நீங்கள் முயற்சிக்காதீர்கள். இது அறிவியலுக்காக என்று கூறியுள்ளார்.

இந்த வினோத பரிசோதனையை செய்த பின்னர், இந்த நடைமுறையில் இல்லாத உணவு முறையை தேர்வு செய்ததற்கு, அவருடைய உடல் எந்த வகையில் பிரதிபலித்தது என்ற விவரங்களையும் அவர் விவரித்துள்ளார்.

நடைமுறையில் இல்லாத உணவு முறையை தேர்வு செய்ததற்கு, அவருடைய உடல் எந்த வகையில் பிரதிபலித்தது என்ற விவரங்களையும் அவர் விவரித்துள்ளார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்