Paristamil Navigation Paristamil advert login

மழைத்துளியா? மறுபிறவியா?

மழைத்துளியா? மறுபிறவியா?

17 கார்த்திகை 2023 வெள்ளி 03:35 | பார்வைகள் : 1562


கங்கையும், கழனியும் !

கதிரவன் ஒளி பட்டு !

கணத்தில் ஆவியாகி !
அந்தரத்தில் ஆனந்தமாய் பவனிவரும். !

அடித்த காற்றில்,திசைமாறி, !
இடித்த இடியில்,இடம் மாறி!

கங்கையிலும் கழனியிலும், மறுபடியும் !
விழுந்த மழைத் துளியில் !

கங்கை எது ?கழனி எது ? !
மாகானும் மாபாவியும் !

காலனின் கயிறு தொட்டு!
நொடியில் ஆவி அடங்கி!

அண்டம் தொடாத,ஆத்மாக்களாய் உலவும். !
பாவக்கணக்கில் இடம் மாறி!

புண்ணியக் கணக்கில்,இனம் மாறி!
மகானாய் மாபாவியாய் என்றிருக்க,மறுபடியும் !

ஜனித்த சிசுக்களில்!
மகான் யார் ?மாபாவி யார் ?
 

வர்த்தக‌ விளம்பரங்கள்