எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஜொந்தாமினர் மீது தாக்குதல் நடத்திய அகதிகள்! - 38 பேர் கைது!!

ஜொந்தாமினர் மீது தாக்குதல் நடத்திய அகதிகள்! - 38 பேர் கைது!!

26 May, 2023, Fri 16:51   |  views: 4111

ஜொந்தாமினர் மீது தாக்குதல் நடத்திய அகதிகள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் Pas-de-Calais நகரில் இடம்பெற்றுள்ளது.

Oye-Plage பகுதியில் இருந்து கடல் மார்க்கமாக பிரித்தானியா நோக்கி அகதிகளை ஏற்றிய படகு ஒன்று செல்ல முற்பட்டது. அதன்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜொந்தாமினர் மூவர், சம்பவத்தில் தலையிட்டு அவர்களை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.

ஆனால் அந்த முயற்சி மோதலில் சென்று முடிந்துள்ளது.

மேலதிக படையினர் சம்பவ இடத்தினை வந்தடையும் முன்னர், மூன்று ஜொந்தாமினர் மீதும் அகதிகள் இணைந்து தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் அவர்கள் படுகாயமடைந்தனர்.

பின்னர் அகதிகள் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில், மேலதிக படையினர் தலையிட்டு அகதிகள் அனைவரையும் கைது செய்தனர்.

மொத்தமாக 38 அகதிகள் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Ilayaraja 80
Ilayaraja concert 2023 Paris
Tel. : 09 84 39 93 51
AMMAN BUREAUTIQUE
Bureautique et informatique
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18