எழுத்துரு விளம்பரம் - Text Pub |
19 March, 2023, Sun 7:54 | views: 6380
ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள் மூன்றாவது நாளாக நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றிருந்தன.
தெற்கு பரிசில் குவிந்த போராட்டக்காரர்கள், பெரும் கலவரத்தில் ஈடுபட்டு, காவல்துறையினர் மீது தாக்குதலும் நடத்தினர். அரசின் செயற்பாடுகளில் நம்பிக்கை இழந்துள்ள மக்கள், காவல்துறையினரின் தடை உத்தரவையும் மீறி வீதிகளில் இறங்கி போராடினர்.
மாலை 6 மணி அளவில் Place d’Italie பகுதியில் ஒன்றிணைய ஆரம்பித்த போராட்டக்காரர்கள், அங்கிருந்து இலக்கின்றி முன்னேறினர்.
காவல்துறையினரால் அனுமதி வழங்கப்படாத போராட்டம் என்பதால், போராட்டக்குழுவினர் இலக்கின்றி வீதிகளுக்குள் நுழைந்தனர்.
13 ஆம் வட்டாரத்தில் இரு தரப்புக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. இதன் முடிவில் 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரவு 9.30 மணி அளவில் நிலமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
போராட்டத்தில் 4,000 பேர் வரையானவர்கள் கலந்துகொண்டதாக அறிய முடிகிறது. முன்னதாக போராட்டக்காரர்களால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படக்கூடும் என நேற்று நண்பகல் முதல் சோம்ப்ஸ்-எலிசே மற்றும் கொன்கோட் சதுக்கம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![]() | அடுத்த ![]() |
|
![]() 🔴 பொது ஒழுங்குகள் சீர்குலைக்கும் அபாயம்! - உள்துறை அமைச்சர் எச்சரிக்கை!!28 March, 2023, Tue 8:07 | views: 2326
![]() 🔴 இரண்டில் ஒரு RER சேவைகள்! - இன்று போக்குவரத்துத் தடை!!28 March, 2023, Tue 6:45 | views: 3653
![]() நாளை மீண்டும் ஆர்ப்பாட்டம்! - 13,000 காவல்துறை, ஜொந்தாமினர் குவிப்பு!!27 March, 2023, Mon 18:51 | views: 1665
![]() வேலை தேடுவோரின் எண்ணிக்கை வீழ்ச்சி!!27 March, 2023, Mon 18:29 | views: 1375
![]() அரசின் மீது அழுத்தம்! - எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க தயாராகும் பிரதமர்!!27 March, 2023, Mon 17:54 | views: 1072
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |