Paristamil Navigation Paristamil advert login

தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக விஜய நாராயண் நியமனம்

தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக விஜய நாராயண் நியமனம்

14 வைகாசி 2026 வியாழன் 10:57 | பார்வைகள் : 1243


தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக  மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. அதை தொடர்ந்து ஏற்கனவே அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த பி.எஸ். ராமன்  ராஜினாமா செய்ததை தொடர்ந்து இன்று தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக விஜய நாராயண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விஜய் நாராயண் ஏற்கனவே 2017-2021 வரை தமிழக தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர் முன்னாள் இந்திய அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலின் உறவினர் ஆவார்.