துபாயில் லொறி மீது சிறிய ரக பஸ் மோதி விபத்து - 7 பேர் பலி
9 ஆனி 2026 செவ்வாய் 10:56 | பார்வைகள் : 185
துபாயில் லொறி மீது சிறிய ரக பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் இந்திய தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன
பஸ் சாரதியின் கவனக்குறைவினாலும் முன்னால் செல்லும் வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளியை பேணாததாலும் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக துபாய் போக்குவரத்து பாதுகாப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பஸ் அதன் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நின்றிருந்த லொறியின் பின்புறத்தில் மோதியதால் ஏழு இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்ததோடு மேலும் 9 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துபாயில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
அத்துடன் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தூதரக அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan