கிரீஸில் 15 வயதுக்குட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாடுக்கு தடை
8 சித்திரை 2026 புதன் 15:40 | பார்வைகள் : 1004
2027 ஜனவரி 1 ஆம் திகதி முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு கிரீஸ் தடை விதிக்கும் என கிரேக்கக் குடியரசின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாக்கிஸ் (Kyriakos Mitsotakis) இன்று தெரிவித்துள்ளார்.
சிறுவர்களிடையே அதிகரித்து வரும் பதற்றம், தூக்கப் பிரச்சனைகள் மற்றும் இணையத் தளங்களுக்கு அடிமையாகும் தன்மை ஆகியவற்றை கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த தடையினை நாட்டிலுள்ள சுமார் 80 சதவீதம் பேர் ஆதரித்துள்ளதாக கிரீஸில் உள்ள கருத்துக் கணிப்பு ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
கிரேக்க அரசாங்கம் ஏற்கனவே பாடசாலைகளில் மாணவர்களிடத்தில் மொபைல் பாவனையை தடை செய்துள்ளதுடன், பதின்ம வயதினரின் திரை நேரத்தைக் கட்டுப்படுத்த பெற்றோர் கட்டுப்பாட்டுத் தளங்களையும் அமைத்துள்ளது.
கடந்த ஆண்டு 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை அணுகுவதைத் தடுத்த உலகின் முதல் நாடாக அவுஸ்திரேலியா மாறியது.
அதையடுத்து, சுலோவீனியா, இங்கிலாந்து, ஆஸ்திரியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் இதேபோன்ற தடைகளை விதிக்கும் பணியில் தற்சமயம் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan