பயங்கரவாத அச்சுறுத்தல் - மிகவும் கனமானது!!
9 கார்த்திகை 2025 ஞாயிறு 09:39 | பார்வைகள் : 2194
13 நவம்பர் 2015 பயங்கரவாத தாக்குதல்களின் 10-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பிரெஞ்சு இராணுவ அமைச்சர் கத்தரின் வோத்ரன் (CATHERINE VAUTRIN), பிரான்சில் பயங்கரவாத அச்சுறுத்தல் 'மிகவும் கனமானதாக' தொடர்கிறது என எச்சரித்தார்.
முக்கிய எச்சரிக்கைகள்:
'முழுமையான கண்காணிப்பு' நிலை அறிவிக்கப்பட்டுள்ளது
பயஙகரவாத் நபர்கள் குறித்த கவலை
வெளிநாட்டு குழுக்களின் செல்வாக்கு
அச்சுறுத்தல்களின் தன்மை:
மிக உயர்ந்த மட்டத்தில் ஜிஹாதி அச்சுறுத்தல்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது
உள்நாட்டு மற்றும் சர்வதேச பதட்டங்கள் காரணமாகவும் ஆபத்துக்கள் உள்ளன்
பாதுகாப்பு நடவடிக்கைகள்:
அரச நிறுவனங்கள், மற்றும் பெரிய இசை நிகழ்வு மற்றும் விழாக்கள் போன்றவற்றின் மீது அதீத கண்காணிப்பு
சென்டினல் படையினரின் (Opération Sentinelle) உயர்ந்த பணியாற்றல் நிலை
வெளிநாட்டு தலையீடுகள் தடுக்கப்படும்
சமீபத்திய சம்பவம்:
மூன்று இளம் பெண்கள் (20 வயது) அக்டோபரில் கைது செய்யப்பட்டனர்.
பரிஸில் பயங்கரவாத தாக்குதல் திட்டம் கண்டறியப்பட்டு முறியடிக்கப்பட்டது.
துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டு பயன்பாடுகள் இவர்களால் திட்டமிடப்பட்டிருந்தது
10-வது ஆண்டு நினைவு:
நவம்பர் 13, 2015-ல் 130 பேர் பாரிஸ் மற்றும் புறநகர் பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
ஜிஹாதி அச்சுறுத்தல் 'அதன் அளவிலும், செயல்படுதல் தயார்நிலையிலும் மிக முக்கியமானது' எனவும், இது 'கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது' என தேசிய பயங்கரவாத எதிர்ப்பு நீதிபதி (procureur national antiterroriste) ஒலிவியர் கிரிஸ்தன் (Olivier Christen) தெரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan