இலங்கை பேருந்துகளில் விரைவில் பணிக்கு வரும் பெண் ஓட்டுநர்கள்
17 புரட்டாசி 2025 புதன் 11:05 | பார்வைகள் : 2929
இலங்கை பேருந்துகளில் விரைவில் பணிக்கு வரும் பெண் ஓட்டுநர்கள்
இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பொது போக்குவரத்து சேவையில் பெண் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் விரைவில் சேர்க்கப்படுவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செவ்வாய்க்கிழமை (16) இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மரியானா அகழியை விட ஆழமான ஆழத்தில் இலங்கை போக்குவரத்து சபை விழுந்துள்ளதாகவும், அதன் அழிவுக்கு அரசியல்வாதிகளே பொறுப்பு என்றும் அமைச்சர் ரத்நாயக்க கூறினார்.
இலங்கையில் உள்ள SLTB டிப்போக்கள் குறைபாடுகளால் நிறைந்து பூமியில் நரகமாக மாறிவிட்டதாக அவர் மேலும் கூறினார்.
இருப்பினும், 25 பேருந்து பணிமனைகளை நவீனமயமாக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் தற்போதைய பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 750 புதிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியமர்த்தப்படுவதாகக் கூறிய அமைச்சர், இலங்கை போக்குவரத்து சபை ஒரு இலாபகரமான நிறுவனமாக மீண்டும் கட்டியெழுப்பப்படுவதாக உறுதிப்படுத்தினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire