நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்களை குறிவைக்கும் சைபர் தாக்குதல்!!
8 புரட்டாசி 2025 திங்கள் 21:56 | பார்வைகள் : 8511
Normandie மற்றும் Hauts-de-France பிராந்தியங்களில் கடந்த வார இறுதியில் சைபர் தாக்குதல் நடந்து, நோயாளிகளின் அடையாளத் தகவல்கள் (பெயர், வயது, மின்னஞ்சல், தொலைபேசி எண்) கசிந்துவிட்டதாக பிராந்திய சுகாதார முகமைகள் (ARS) அறிவித்துள்ளன.
மருத்துவக் கோப்புகளின் உள்ளடக்கம் பாதிக்கப்படவில்லை. இந்த தாக்குதல், மருத்துவ நிபுணர்களின் அடையாளங்களை தவறாக பயன்படுத்தி, அவர்களது கணக்குகள் மூலம் சர்வர்களுக்குள் புகுந்ததன் விளைவாக ஏற்பட்டுள்ளது.
தாக்கப்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளின் செயல்பாடுகள் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் இயல்பாக நடைபெற்று வருகின்றன. நோயாளிகள் "phishing" என்ற வஞ்சக முயற்சிக்கு இலக்காக மாறக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire