Paristamil Navigation Paristamil advert login

வவுனியாவில் வீட்டுத் தோட்டத்திற்குள் 9 அடி முதலை

வவுனியாவில் வீட்டுத் தோட்டத்திற்குள் 9 அடி முதலை

6 ஆனி 2025 வெள்ளி 14:33 | பார்வைகள் : 3559


வவுனியாவின் கொக் எலிய பகுதியில் உள்ள வீட்டுத் தோட்டத்திற்குள் நேற்று  சுமார் 9 அடி நீளமுள்ள முதலை ஒன்று நுழைந்துள்ளது. 

உள்ளூர்வாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் முதலை பிடிக்கப்பட்டதாக வவுனியா வனவிலங்கு அலுவலகம் தெரிவித்துள்ளது. 

குறித்த முதலை உணவு தேடி தோட்டத்திற்கு வந்திருக்கலாம் என்று வனவிலங்கு அதிகாரிகள் கூறுகின்றனர். 

பிடிபட்ட முதலையை அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் விட வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.