டைன்சைடு அதிவேக கார் துரத்தல்: 7 பொலிஸ் அதிகாரிகள் காயம்
18 சித்திரை 2025 வெள்ளி 08:19 | பார்வைகள் : 8260
டைன்சைடு பகுதியில் நடந்த அதிவேக கார் துரத்தல் சம்பவத்தில் 7 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
பிரித்தானியாவின் டைன்சைடு (Tyneside) பகுதியில் நடந்த பரபரப்பான அதிவேக கார் துரத்தல் சம்பவத்தில் 20 வயது இளைஞன் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த துரத்தலின் விளைவாக ஏழு பொலிஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர் மற்றும் அப்பகுதியில் ஒரு முக்கிய சாலையும் இதனால் மூடப்பட்டது.
டர்ஹாமில் உள்ள சில்வியா டெர்ரேஸில் வசிக்கும் மஸியார் அசார்போன்யாட்(Mazyar Azarbonyad) என்பவர் ஏப்ரல் 9 ஆம் திகதி வடக்கு நோக்கிச் சென்ற ஏ1 சாலையில் நடந்த இந்த துரத்தல் மற்றும் விபத்து சம்பவத்துடன் தொடர்புடையவர் ஆவார்.
அவர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக முறைப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை நியூகாஸில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் ஆஜராக உள்ளார்.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்ட உதவியதாக சந்தேகிக்கப்பட்டு முதலில் கைது செய்யப்பட்ட 20 வயதுடைய பெண் மீது இந்த குறிப்பிட்ட குற்றச்சாட்டு தொடர்பாக மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று நார்தம்ப்ரியா லிஸ் தெரிவித்துள்ளது.
இருப்பினும், போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் குற்றங்களுக்காக அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan