விமான எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி - வடகொரியா
21 பங்குனி 2025 வெள்ளி 09:21 | பார்வைகள் : 9607
கிம்மின் மேற்பார்வையில் விமானங்களை எதிர்க்கும் ஏவுகணைகளை வடகொரியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
11 நாட்கள் வரை இந்த கூட்டு ராணுவ பயிற்சி நடந்தது. ட்ரம்ப் பதவியேற்ற பின் நடந்த முதல் கூட்டு ராணுவ பயிற்சி இதுவாகும்.
இந்த நிலையில், கிம் ஜாங் உன் மேற்பார்வையில் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
இது விமானங்களை எதிர்க்கும் ஏவுகணைகளுக்கான சோதனை ஆகும். இது அந்நாட்டின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், அமெரிக்கா-தென் கொரியாவின் கூட்டு ராணுவ பயிற்சியின் இறுதிநாளில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வடகொரிய செய்தித் தொடர்பாளர் ஒருவர், அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீண்டும் இத்தகைய ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan