200 ஆண்டுகள் பழமையான கண்ணாடி போத்தல் பிரான்ஸில் கண்டுபிடிப்பு
29 புரட்டாசி 2024 ஞாயிறு 16:03 | பார்வைகள் : 9491
பிரான்சில் 200 ஆண்டுகள் பழமையான செய்தியுடன் கூடிய கண்ணாடிப் போத்தல் ஒன்றை தொல்லியல் மாணவர்கள் கண்டறிந்துள்ளனர்.
பிரான்சில் கவுலிஷ் நகரத்தில்(Gaulish town) அகழ்வாய்வில் ஈடுபட்ட மாணவ தன்னார்வலர்கள் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை செய்துள்ளனர். அதில் மண் பானைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய கண்ணாடி போத்தலை அவர்கள் கண்டறிந்தனர்.
இந்த போத்தல் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக புதைந்திருந்தது. இதில் 1825 ஜனவரியில் இப்பகுதியில் ஆரம்ப அகழ்வாய்வுகளை மேற்கொண்ட உள்ளூர் பிரபலமான PJ Feret என்பவரால் எழுதப்பட்ட குறிப்பு இருந்தது.
இந்த செய்தி கவுலிஷ் கிராமத்தின் வரலாறு மற்றும் அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட தொல்லியல் முறைகள் பற்றிய முக்கியமான தகவல்களை வழங்குகிறது.
Eu-வின் பிராந்திய தொல்லியல் சேவை தலைவர் Guillaume Blondel இந்த கண்டுபிடிப்பால் மகிழ்ச்சியடைந்துள்ளார். "இது முற்றிலும் அற்புதமான தருணம்" என்று அவர் கூறினார். "200 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த செய்தியை கண்டறிவது... இது மிகவும் ஆச்சரியமானது." என்றும் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan