Paristamil Navigation Paristamil advert login

இலங்கையை விட்டு வெளியேறிய நூற்றுக் கணக்கான வைத்தியர்கள்

இலங்கையை விட்டு வெளியேறிய நூற்றுக் கணக்கான வைத்தியர்கள்

16 ஆவணி 2023 புதன் 03:17 | பார்வைகள் : 8014


கரவனெல்ல, தெஹியத்தகண்டிய, மஹாஓயா மற்றும் கல்முனை பிரதேசத்தில் உள்ள பல வைத்தியசாலைகளில் மயக்க மருந்து நிபுணர்கள் இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

12 மாத காலப் பகுதியில் 842 சிரேஷ்ட வைத்திய அதிகாரிகளும் 274 விசேட வைத்தியர்களும் 23 அவசர சிகிச்சை நிபுணர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என சங்கத்தின் பேச்சாளர் டாக்டர் திரு. சமில் விஜேசிங்க  ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினைக்கு அரசு உடனடியாக உரிய தீர்வைக் காணப்பட்டால் சுகாதாரத் துறையே கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றும் அவர் கூறினார்

வர்த்தக‌ விளம்பரங்கள்