கனடாவில் கரடிகள் தாக்கி இருவர் பலி...

2 ஐப்பசி 2023 திங்கள் 06:44| பார்வைகள் : 867
கனடாவில் பூங்கா அல்பர்ட்டாவின் பான்ஃப் தேசிய பூங்காவில் கரடி தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலை நடத்திய கரடியை அதிகாரிகள் கருணை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இச்சம்பவம் இரவு நேரத்தில் இடம் பெற்றதனால் குறித்த இடத்திற்கு வன பாதுகாப்பு அதிகாரிகள் செல்வதற்கு நீண்ட நேரம் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.