Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணை -ஈரானின் அனுமதி அவசியம்

 மீண்டும் மூடப்பட்ட  ஹோர்முஸ் நீரிணை -ஈரானின் அனுமதி அவசியம்

18 சித்திரை 2026 சனி 14:08 | பார்வைகள் : 1139


கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் ஈரான்மீது தாக்குதலை மேற்கொண்டது.

இதனை தொடர்ந்து பதில் தாக்குதலை ஈரான் முன்னெடுத்துள்ளது.

பின்னர் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் அமெரிக்கா நீரிணையை திறக்குமாறு பல எச்சரிக்கைகளை விடுத்து இருந்தது.

மேலும் ஏப்ரல் முதல்கிழமைகளில் அமைதி பேச்சு வார்த்தைகளை இரு தரப்பினரும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில் ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.

ஈரான் 18.04.2026 மீண்டும் ஒருமுறை ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளது.

பிரதான கப்பல் போக்குவரத்துப் பாதை மீண்டும் மூடப்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாகக் கப்பல்கள் பயணிப்பதற்கு ஈரானின் அனுமதி அவசியம் எனவும் ஈரானின் அரச ஊடகமான 'IRIB' அறிவித்துள்ளது.