இலங்கையில் குடும்பத்துடன் நீராடச் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி
15 சித்திரை 2026 புதன் 18:25 | பார்வைகள் : 1202
மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை மற்றும் நான்கு மகன்களில், காணாமல் போன மூவரில் இருவரின் சடலங்கள் இன்று (15) பிற்பகல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
தந்தை மற்றும் அவரது நான்கு மகன்கள் நேற்று (14) பிற்பகல் ஆற்றில் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகினர். இதில் தந்தையும் ஒரு மகனும் உயிர் தப்பிய நிலையில், மற்றைய மூன்று மகன்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.
அவர்களில் இருவரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர்கள் 35 மற்றும் 34 வயதுடைய நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த நான்கு மகன்களும் சித்திரை புத்தாண்டுக்காகத் தமது சொந்த கிராமத்திற்குத் திரும்பியிருந்தனர். அவர்கள் தமது தந்தையுடன் இணைந்து நீராடச் சென்ற போதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan