லெபனான் மீதான தாக்குதல் - ஐநா கடும் கண்டனம்
9 சித்திரை 2026 வியாழன் 16:39 | பார்வைகள் : 1342
லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய பாரிய தாக்குதல்களை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
லெபனான் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர்.
பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவரது ஊடகப் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக்,
"பொதுமக்களின் உயிரிழப்புகளை பொதுச்செயலாளர் கடுமையாகக் கண்டிப்பதுடன், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பொதுமக்களின் மரணங்கள் குறித்து அவர் மிகுந்த கவலை கொண்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
லெபனானில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த இராணுவ நடவடிக்கைகள், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கைக்கு "பாரிய அச்சுறுத்தலை" ஏற்படுத்துவதாகவும் பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மோதல்களை நிறுத்துமாறு அனைத்துத் தரப்பினரிடமும் அவர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்த மோதலுக்கு எந்தவொரு "இராணுவ தீர்வும்" கிடையாது என்பதையும் அந்த அதிகாரப்பூர்வ அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan