Paristamil Navigation Paristamil advert login

ஈரானில் ஆட்சி தொடர்பில் மாற்றம் வேண்டும் - டிரம்ப் பகிரங்கம்!

ஈரானில் ஆட்சி தொடர்பில் மாற்றம் வேண்டும் -  டிரம்ப் பகிரங்கம்!

14 மாசி 2026 சனி 08:44 | பார்வைகள் : 813


ஈரானில் உள்நாட்டு போராட்டங்களுக்கு இடையில் அமெரிக்காவானது சில எச்சரிக்கைகளை விடுத்துவருகின்றது.

ஈரானின் தற்போதைய ஆட்சி முறையில் மாற்றம் ஏற்படுவது நடக்கக்கூடிய மிகச்சிறந்த விடயம்" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து கருத்து வெளியிடும் போதே டிரம்ப் இதனைத் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

ஈரானை வழிநடத்துவதற்கு தான் விரும்பும் நபர் யார் என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்த அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

ஈரானில் ஆட்சியைப் பொறுப்பேற்கக் கூடிய தகுதியான "ஒரு குழுவினர் இருக்கின்றார்கள்" என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.