ரிஷாப் பண்ட்டிற்கு என்ன ஆனது? இன்றைய போட்டியில் திடீர் விலகல்
11 தை 2026 ஞாயிறு 18:00 | பார்வைகள் : 1089
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக, இந்தியாவின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று வதோதாராவில் நடக்க உள்ளது.
இப்போட்டியில் விளையாட உள்ள இந்திய அணியில் ரிஷாப் பண்ட் இடம்பெற்றிருந்தார். ஆனால், வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது அவருக்கு காயம் ஏற்பட்டது.
வதோதரா பயிற்சி அமர்வின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியானது. அதில் ரிஷாப் பண்ட் (Rishabh Pant) காயத்தினால் அவதிப்படுவது தெரிய வருகிறது.
பண்டிற்கு உடனடியாக அணியின் மருத்துவக் குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், காயம் குறித்த கவலைகள் மேலதிகப் பரிசோதனைக்கு வழிவகுத்தன.
இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து ரிஷாப் பண்ட் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan