வங்கி செயல்பாடுகளில் பாதிப்பு!!
2 மார்கழி 2025 செவ்வாய் 14:11 | பார்வைகள் : 3558
டார்கெட் 2 (Target 2) எனப்படும் ஐரோப்பிய வங்கிகளுக்கிடையிலான நிதி பரிமாற்ற அமைப்பு டிசம்பர் 25 முதல் 28 வரை மூடப்படுவதால், இரண்டு வேறு வங்கிகளுக்கிடையிலான செபா (SEPA) பணப்பரிமாற்றங்கள் இந்த காலத்தில் நிறுத்தப்படுகின்றன.
ஐரோப்பிய வங்கிகளுக்கிடையிலான பணப்பரிவர்த்தனைகள் டார்கெட் 2 வழியாகச் செல்கின்றன. இது வார இறுதிகள் மற்றும் ஆண்டின் சில குறிப்பிட்ட நாட்களைத் தவிர, தினமும் செயல்படும் அமைப்பு: ஜனவரி 1, மே 1, டிசம்பர் 25 மற்றும் 26, அதேபோல் பெரிய வெள்ளிக்கிழமை (Good Friday) மற்றும் ஈஸ்டர் திங்கட்கிழமை போன்ற நாட்களில் மட்டுமே மூடப்படும்.
இது சம்பளம், வாடகை போன்ற வழக்கமான பரிவர்த்தனைகளையும் பாதிக்கும். உதாரணமாக, டிசம்பர் 25 அன்று செய்யப்படும் செபா பணப்பரிமாற்றம் டிசம்பர் 29 அன்று தான் கிடைக்கும்.
ஆனால் உடனடி பணப்பரிவர்த்தனைகள் மற்றும் ஒரே வங்கிக்குள் நடைபெறும் உள்புற பணப்பரிமாற்றங்கள் தொடர்ந்தும் சாத்தியமாக இருக்கும். எனவே, கிறிஸ்துமஸ் காலத்தில் வங்கி சேவைகளில் சில கட்டுப்பாடுகள் இருந்தாலும், சில பணப்பரிவர்த்தனைகளைப் பயன்படுத்த முடியும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan