பெண்ணை தாக்கிய கிரிக்கெட் வீரருக்கு சிறை தண்டணை
29 கார்த்திகை 2025 சனி 13:05 | பார்வைகள் : 823
பெண்ணை தாக்கி, செல்போன் திருடிய வழக்கில் கிரிக்கெட் வீரருக்கு 3 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது.
30 வயதான கிப்ளின் டோரிகா(kiplin doriga), 2017 ஆம் ஆண்டு பப்புவா நியூ கினியா கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார்.
2021 மற்றும் 2024 ஐசிசி T20 உலகக்கோப்பையில் பப்புவா நியூ கினியா அணியில் இடம்பெற்றிருந்தார்.
கடந்த ஆகஸ்ட் 25 ஆம் திகதி, டோரிகா அதிகாலை 2;30 மணியளவில் ஹொட்டலுக்கு திரும்பி கொண்டிருந்த போது, செயிண்ட் ஹெலியர் அருகே பெண் ஒருவரை தாக்கி அவரது செல்போனை பறித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டின் கீழ் பொலிஸார் அன்றைய தினமே கைது செய்தனர். நவம்பரில் வழக்கு விசாரணை முடியும் வரை அவர் காவலில் வைக்கப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக நவம்பர் 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜரான டோரிகா, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, டோரிகாவிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan