உண்மையான நிம்மதி எது?
5 கார்த்திகை 2025 புதன் 14:20 | பார்வைகள் : 1019
மன நிம்மதி வேண்டும் என்று நினைக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் அதே சமயத்தில் நம்முடைய மன நிம்மதியைக் கெடுப்பதில் முக்கிய பங்கு கொண்ட ஈகோ, அதனைப் பெறுவதற்கு ஒரு மிகப்பெரிய தடையாக இருக்கலாம். ஈகோவை பொறுத்தவரை அதற்கு ஒப்பீடு, சத்தம் மற்றும் ஸ்பாட்லைட் மீது அதீத அன்பு.
ஆனால் உண்மையான நிம்மதி என்பது அடக்கம், தெளிவு மற்றும் காரணம் ஆகியவற்றை புரிந்து கொண்டு வாழ்க்கையை நடத்துவது ஆகும். எனவே உங்களுடைய ஈகோவைக் கட்டுப்படுத்தி, அதே சமயத்தில் மன நிம்மதியைப் பெறுவதற்கான சில முக்கியமான குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.
ஈகோவை விரட்ட நினைப்பதற்கு முன்பு எந்தெந்த சமயத்தில் உங்களுக்கு ஈகோ ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். பெரும்பாலும் வேறொருவருடன் ஒப்பிட்டுக் கொள்வது, நீங்கள்தான் சரி என்பதை நிரூபிக்க நினைக்கும் உணர்வு அல்லது பிறர் உங்களை ஏதாவது சொல்லும்போது உங்களைத் தற்காத்துக் கொள்வது போன்ற சமயங்களில் ஈகோ வெளிப்படலாம். எனவே இது மாதிரியான நிகழ்வுகளுக்கு கவனம் செலுத்துவதன் மூலமாக எப்போது ஈகோ வெளிப்படுகிறது என்ற விழிப்புணர்வு உங்களுக்குக் கிடைக்கும்.
எல்லாவற்றையுமே கற்றுத் தெரிந்து கொண்டோம், இனிமேலும் கற்றுக் கொள்வதற்கு எதுவுமே இல்லை’ என்று நீங்கள் நினைக்கும் போது அந்த இடத்தில் ஈகோ தோன்றுகிறது. இதனைச் சரி செய்வதற்கு நீங்கள் தொடக்க நிலையில் உள்ள ஒரு நபராக உங்களைப் பார்க்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக் கொள்வதற்கான ஆர்வம், தவறுகளை ஏற்றுக் கொள்வதற்கான தன்மை போன்றவை இதற்கு முக்கியம்.
உங்களுக்கு எந்தெந்த விஷயங்கள் தெரியும் என்பதை வெளிக்காட்டுவதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக உங்களுடைய வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள். அடக்கத்தோடு வாழ்க்கையை நீங்கள் அணுகும் போது பதில் கொடுப்பதை விட கேள்விகள் அதிகமாகக் கேட்க ஆரம்பிப்பீர்கள்.
பிறர் மீது நீங்கள் காட்டும் அக்கறை, கவனம் மற்றும் ஏற்புடையமை ஆகியவை “நான்” என்ற வார்த்தையை அகற்றி “நாம்” என்ற உணர்வை வளரச் செய்யும். இது மாதிரியான விஷயங்களில் நீங்கள் ஈடுபடும் போது அந்த இடத்தில் ஈகோ இருக்காது.
மனத் தெளிவோடு நீங்கள் இருக்கும் போது உங்களுடைய யோசனைகள், உணர்வுகளோடு தொடர்பு கொள்ள ஆரம்பிப்பீர்கள். “நான் அவரை விட சிறந்தவர்”, “நான் அவரை விட எந்த விதத்தில் குறைந்து போய் விட்டேன்”, “என்னை கவனியுங்கள்” என்பது போன்ற வாக்கியங்கள் உங்களிடமிருந்து விலக ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் மன நிம்மதியானது உங்களிடம் நிரந்தரமாக வந்து சேரும்.
ஏதோ ஒரு சாதனை, அங்கீகாரம் மற்றும் அந்தஸ்துக்கான மதிப்பை ஈகோ பயன்படுத்திக் கொள்கிறது. ஆனால் அமைதியாக மற்றும் நிம்மதியாக வாழ்வதற்கு நீங்கள் உங்களுடைய கவனத்தை ‘எப்படி தோற்றமளிக்கிறீர்கள்’ என்பதிலிருந்து ‘நீங்கள் என்னவாக மாறப் போகிறீர்கள்’ என்பதற்கு மாற்ற வேண்டும்.
ஏதோ ஒரு காரணத்திற்காக வெளிப்புறமாக நீங்கள் நடிக்க ஆரம்பிக்கும்போது, உங்களுக்குப் பிடிக்காத ஒரு விஷயம் நடந்து விட்டால் உடனடியாக அங்கு ஈகோ வெளிப்படும். ஈகோவைக் கட்டுப்படுத்துவது என்பது உங்களை நீங்களே மீட்பது. எனவே வெளியே ஒருபோலவும் உள்ளே ஒருபோலவும் இருக்காதீர்கள். உங்களால் ஒரு விஷயத்தை ஈடுபாட்டுடன் செய்ய முடியவில்லை என்றால், அதிலிருந்து முதலிலேயே எடுத்துரைத்துவிட்டு விலகிவிடுங்கள்.
எனவே இந்த 7 யுக்திகளை தினசரி பயிற்சி செய்வதன் மூலமாக ஈகோவை விரட்டி, மன நிம்மதி பெறுவதற்கான சாத்தியங்கள் உண்டு.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan