எழுத்துரு விளம்பரம் - Text Pub |
23. 5 வரும் எண்களிலேயே இது மிகவும் அதிர்ஷ்டமானது. இந்த எண் வருகிற பெயரை உடையவர்களுக்கு எடுத்த காரியங்களிலும், எண்ணுகிற எண்ணங்களிலும் வெற்றி உண்டாகும். இவர்களுடைய திட்டங்கள் அனைத்தும் நிச்சயமாக வெற்றி பெறும். பிறருக்குச் செய்வதற்கு அரியதாகத் தோன்றும் காரியங்களும் இவர்களுக்கு எளிதாகக் கைகூடிவிடும். பெரிய திட்டங்களை மேற்கொண்டால் பிரபலமாவர். அதன் பயனாக உயர்ந்த பதவியில் இருக்கும் மனிதர்களின் ஆதரவும், ஆட்சி பீடத்தில் இருப்பவர்களின் பாதுகாப்பும் கிடைக்கும். என்வே, இவர்கள் எப்போதும் பெரிய முயற்சிகளில் ஈடுபடுவதே நல்லது. இல்லையெனில் சோம்பல் நிறைந்த சுகவாழ்க்கையாக வாழ்வு முடிந்து விடும். இதை ராஜவசியம் மிகுந்த எண் என்பர்.