• Paristamil Tamil news செய்திகள்
    • Paristamil France News பிரான்ஸ்
    • Paristamil Srilanka News இலங்கை
    • Paristamil India News இந்தியா
    • Paristamil World News உலகம்
    • Paristamil Cinema News சினிமா
    • Paristamil Sports News விளையாட்டு
    • Paristamil Vinotham News வினோதம்
    • Paristamil France News பிரெஞ்சுப் புதினங்கள்
    • Paristamil Samayal News சமையல்
    • Paristamil Technology News அறிவியல்
    • Paristamil Technology News  தொழில்நுட்பம்
    • Paristamil Medical News மருத்துவம்
    • Paristamil Jokes நகைச்சுவை
    • Paristamil France News கவிதைகள்
    • Paristamil Special Essay சிறப்புக் கட்டுரைகள்
  • Paristamil Currency Convertor நாணய மாற்று விலை
  • Paristamil Annonce விளம்பரம்
  • Paristamil Prenom குழந்தைகள் பெயர்
  • Paristamil Chat  அரட்டை
  • Tamilannuaire தமிழ் வழிகாட்டி
  • Paristamil Annonce விளம்பரம் செய்ய
  •  Paristamil Tamil newsஏனையவை
    • Paristamil France News காணொளிகள்
    • Paristamil Annonceவாங்க - விற்க/ Petites annonces
    • Paristamil FM பரிஸ்தமிழ்FM
    • Paristamil France Administration நிர்வாக தகவல்கள்
    • Paristamil Contact தொடர்புக்கு
z
logo
Desktop version

நந்திக்கடல் - பத்தாண்டுகள்

19 May, 2019, Sun 15:06   |  views: 7094

Share

இறுதிப்போரை தோல்வி என்று நம் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. அடிப்படையில் அது தோல்வியும் அல்ல.
 
கிரேக்கர்களின் தெர்மாப்பிளையோ அல்லது யூதர்களின் மாசாதவோ தோல்வி என்று பதியப்படவில்லை. அவை மகத்தான வெற்றிகளாகவே பதியப்பட்டுள்ளன. இதுபோன்ற நிகழ்வுகள் காலம் முழுதும் எதிரொலித்து ஒரு இனத்தை காத்து இயக்கும் வல்லமை கொண்டது.
 
அதனால் நந்திக்கடலின் எதிர்கால விளைவுகளை கருத்தில் கொண்டு அதை ஒரு மகத்தான வெற்றியாகவே பதியப்படவேண்டும். இந்த வெற்றி மனநிலையே நம்மை அடுத்த கட்டத்திற்கு நம்பிக்கையுடன் நகர்த்தும் உந்து சக்தியாக இருக்கும். எவ்வாறு கிரேக்கர்களும் யூதர்களும் மீண்டார்களோ, அதுபோன்ற மீட்சிக்கு வழிவகுக்கும்.
 
இவ்வுலகில் போரிட்டு அழிந்த இனங்களைவிட, போரிடாமல் அழிந்த இனங்கள்தான் மிக அதிகம். போர்தான் ஒரு தேசத்தின் ஆன்மாவையே உருவாக்குகிறது என்கிறார் புகழ்பெற்ற தத்துவமேதை ஏகல்[3,12].
 
புலிகள் எவ்வாறு பலவெற்றிகளைப் பெற்றார்கள் என்று பலகாரணிகளை அடுக்கினேன், ஆனால் தலைவர் பிரபாகரன் அவர்களை அவற்றில் உள்ளடக்கவில்லை. ஏனென்றால் இவற்றை உருவாக்கியதே அவர்தான். பிரபாகரன் போன்ற ஒரு ஆளுமை இனி எவ்வளவு காலமானாலும் கிடைக்கப்போவதில்லை. பிரபாகரன் போன்ற தலைமையை எப்படி உருவாக்குவது என்பதை எந்த அறிவியல் தத்துவத்தாலும் கூற முடியாது. இதுபோன்ற நிகழ்வுகளை Blackswan என்கிறார் நசீம் தலீபு [13].
 
பிரபாகரன் அவர்கள் சித்தாந்தம், பண்பாடு, சட்டம், ராணுவ தந்திரங்கள், படைத்தலைமை, நாட்டின் தலைமைப்பொறுப்பு, உலக அரசியல் எனப் பலதுறைகளை கட்டி ஆண்ட ஆளுமை. மற்ற பெரும் தலைவர்கள் ஏதாவது ஒன்றையாவது வெளியிலிருந்து கடன் வாங்கி இருப்பார்கள். உதாரணமாக லெனின், மாவோ ஆகியோர் மார்க்சிடம் இருந்து சித்தாந்தத்தை, பண்பாட்டை கடன் வாங்கினர். நான் அறிந்தவரையில் பிரபாகரனைப் போல இவ்வாறு அனைத்திலும் ஆளுமை செலுத்தியவர் இருவரே. ஒருவர் சுபார்ட்டாவின் இலைக்கர்கசு[14], இன்னொருவர் முகம்மது நபிகள்.
 
பிரபாகரன் போன்ற தலைமை நமக்கு இனி கிடைக்கப்போவதில்லை, ஆனால் நாம் மனம் தளரத்தேவையில்லை. நபிகளின் காலத்தில் அரேபியா பொற்காலம் காணவில்லை, மாறாக அவரின் மறைவிற்குப்பின் வந்த தலைமைகளை பொற்காலம் படைத்தனர். சுபார்ட்டவும் அவ்வாறே. நபிகள் போன்ற தலைமைகள் என்ன செய்கிறார்கள் என்றால், நாட்டிற்கு ஒரு பலமான அடித்தளத்தை அமைத்து போகவேண்டிய பாதையையும், வழிமுறைகளையும் உருவாக்கிவிடுகிறார்கள். அவர்களுக்குப் பின்வரும் தலைமைகள் அதை பின்பற்றி பெரும் வெற்றிகளைப் பெறுகிறார்கள். இவ்வாறுதான் நாம் பிரபாகரனைப் பார்க்கவேண்டும். பொதுவாக இதுபோன்ற மாபெரும் ஆளுமைகளைப் பற்றி கூறப்படுவது என்னவென்றால் “அவர்கள் சரியான நேரத்தில் தோன்றுவார்கள், சரியான நேரத்தில் மறைவார்கள்”. நாம் பெரிதாக கலங்கத் தேவையில்லை. நாம் மாபெரும் தேசம் படைக்க என்ன தேவையோ, அதற்கான மிக பலமான அடித்தளத்தை பிரபாகரன் படைத்துவிட்டார். இனி மிச்சம் இருப்பதை கட்டி முடிப்பது மட்டுமே நமது வேளை. இங்கு ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.
 
பிரபாகரனின் பாதை என்பது மதங்களைப்போல குருட்டுத்தனமாக பின்பற்றுவது கிடையாது. பகுத்தறிந்த செயல்பாடுகளையும் நம்பிக்கையையும் கலந்த பாதை.
 
இனி நாம் என்ன செய்யவேண்டும் என்பதை சுருக்கமாகக் கூறினால் “நமது சூழலுக்கேற்ற சிக்கலான அமைப்புகளை கட்டி எழுப்பவேண்டும்”. நாம் பார்த்த அனைத்து உத்திகளும் அடிப்படையில் இதை நோக்கியதே. நாம் எதிரியைத் தோற்கடிக்க அவர்களைவிட சிக்கலான அமைப்பாக நாம் இருக்கவேண்டும். இதைப் பயன்படுத்திதான் புலிகள் வெற்றி கொண்டார்கள், நாம் பயணிக்கவேண்டிய பாதையும் இதுதான். புலிகள் இவ்வுத்திகளை இராணுவ அமைப்பிற்கு பயன்படுத்தினார்கள், நாம் அனைத்து துறைகளிலும் பயன்படுத்தவேண்டும். புலிகள் வகுத்த பாதையைக் கொண்டு நாம் இழந்ததை மட்டும் மீட்கப்போவதில்லை. தமிழ்ச்சமூகத்தின் சாதி பாகுபாடுகளை ஒழித்து, சமூகத்தை மறுசீரமைத்து, சிக்கலான அமைப்புகளை கட்டி எழுப்பி, உலகில் அணைத்து துறைகளிலும் மாபெரும் சாதனைகள் நிகழ்த்துவோம்.
 
அதற்கான வலிமை புலிகளின் வரலாற்றிற்கு உண்டு. அவ்வரலாறுதான் புலிகள் நமக்கு விட்டுச்சென்ற மாபெரும் கொடை.
 
நன்றி - சமகளம்

 



  முன்அடுத்த   

ayurveda-muligai-vaidhiya-salai
computer-class-gare-de-bondy
vethalai-mai-jothidam
•  உங்கள் கருத்துப் பகுதி
பொதறிவுத் துணுக்கு :

* மேல் தாடையை அசைக்கும் விலங்கு

  முதலை

முன்னைய செய்திகள்

டொலர் நெருக்கடியை தீர்க்க ரணில் அமைக்கும் வியூகம் வெற்றிபெறுமா?

16 May, 2022, Mon 19:44   |  views: 1237

தமிழ்க் கட்சிகளின் கவனத்திற்கு

27 April, 2022, Wed 17:35   |  views: 8005
 1   2     அடுத்த பக்கம்›        


Advertisement

hik-vision
sri-kaliamman-astrologue
om sakthi Jothidam nilayam
Kaliamman Jothidam nilayam
lebara play

PUB
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்

Tél.: 09 83 06 14 13

தமிழில் தொடர்பு கொள்ள:

Madame. பார்த்தீபன் றஜனி - 07 68 55 17 26

  • Advertisement Contact